போலி பத்திரிகையாளர்கள் சங்கம்: சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்! - Dr கா.குமாரின் என் குரல்
பொது நலன் சார்ந்த நோக்கத்துடன் யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர்களாக செயலாற்றலாம். காலம் நேரம் பாராமல் ஒரு சமூக சிந்தனையோடு பணியாற்றும் ஒரு உண்ணதமான பணியாகும். ஆனால், பத்திரிகையாளர் என்பதையே ஒரு அதிகாரமாகவும், தரகு வேலையாகவும், உலாவி வந்து பணம் சம்பாதிக்கு பிழைப்பாகவும் பயன்படுத்துவர்கள் இத்துறையில் பெருகி வருவது ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தானது.
நமது நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது, மக்கள் சிந்தனையும், தேடலும் மாற்றமடைந்து வருகின்றன. இதனுடன், பத்திரிகை துறையும் வளர்ந்து பல்வேறு தரப்புகளை அடைய முயல்கிறது. ஆனால், பத்திரிகை துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று புற்றீசல் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர்கள் சங்கம். 7 பேர் இருந்தால் போது ஒரு சங்கம் உருவாக்கிவிடலாம் என்ற அவல நிலையே இன்று பல்வேறு தவறான செயல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பெரும் அச்சுறுத்தல்
இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் ஒரு புதிய நிலையை உருவாக்கியுள்ளது. இந்த போலி பத்திரிகையாளர்கள் தங்கள் சுயநல தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சமூகத்திற்கு தவறான தகவல்களை வழங்குகின்றனர். அவர்கள் பாரம்பரிய பத்திரிகை நிறுவனங்களின் அடையாளங்களை பயன்படுத்தி, மக்களின் நம்பிக்கையை மோசடி செய்கிறார்கள்.
உள்நோக்கம்
பத்திரிகை துறையின் உயர்ந்த நோக்கங்கள் மற்றும் தரவுகளுக்கு எதிராக, இந்த சங்கங்கள் முழுமையாக வேறு நோக்கங்களைப் பின்பற்றுகின்றன. பலர் பணம், சுயநல அரசியல், அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றனர். இதனால், உண்மையான பத்திரிகையாளர்களின் மதிப்பும், மக்களுக்கான நம்பிக்கையும் குறைவடைகிறது.
சமூகத்திற்கு விளைவுகள்
போலி பத்திரிகையாளர்கள் சங்கம் சமூகத்தில் பலவிதமான தீமைகளை ஏற்படுத்துகிறது.
பொய் செய்திகளால் மக்களிடையே தவறான நம்பிக்கைகள் உருவாகின்றன. இது சமூகத்தின் ஒற்றுமையை சிதைக்கக்கூடும்.
நம்பிக்கை இழப்பு
உண்மையான பத்திரிகையாளர்கள் தங்கள் நேர்மையை நிரூபிக்க தொடர்ந்து போராட வேண்டிய நிலை உருவாகிறது.
சட்டரீதியான பிரச்சினைகள்
போலியான செய்திகளை பரப்புவதன் மூலம் பல்வேறு சட்டபூர்வமான பிரச்சினைகளையும் உருவாக்குகின்றனர்.
காவல் துறைக்கு பெரும் சவால்
போலி சங்கங்கள், அடையாள அட்டை விற்பனை செய்வது, சமூக விரோத செயல்களுக்கு துணை போவது போன்ற செயல்கள், குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் காவல் துறைக்கு பெரும் சவால்களாக உள்ளது.
எதிர்கொள்ள வேண்டிய அவசியம்
போலி பத்திரிகையாளர்கள் சங்கம் ஒரு பெரும் சமூக அச்சுறுத்தலாக மாறிவிட்டதால், இதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் செயல்களைத் தடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்கும் ஒரு பரந்த முறை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இதுபோன்று பெருகி வரும் போலி பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு முறைபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
பதிவு துறையில் பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு செய்வதை தடைசெய்யவேண்டும். அதற்கான புதிய வழிமுறையினை உருவாக்கவேண்டும். தொழில்துறையில் மட்டுமே பதிவு செய்ய வழிகாட்டுமுறைகளை நெறிமுறைபடுத்தவேண்டும்.
போலி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உள்நோக்கம் மற்றும் செயல்பாடுகள் நமது சமூகத்தின் நன்மையைப் பாதிக்கின்றன. இவ்வாறு போலியானவர்கள் நம் சமூகத்தில் வேரூன்றாமல், நாம் அவர்களுக்கு எதிராக தற்காப்பு ஏற்படுத்தி, உண்மையான பத்திரிகை துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
No comments
Thank you for your comments