வாரணவாசி கிராமத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வாரணவாசி கிராமத்தில் இன்று (14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் ஆகியோர் வழங்கினார்கள்.
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். இன்று மக்கள் தொடர்பு திட்டம் நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 05.08.2024 முதல் 12.08.2024 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனைபட்டா, பட்டா மாற்றம், உழவர் பாதுகாப்பு திட்டம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 42 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 125 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 1 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும், வருவாய் துறை சார்பில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் வாயிலாக இயற்கை மரணம் உதவித் தொகை 5 நபர்களுக்கும் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா 69 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை மூலம் மகளிர் சுய உதவித் வங்கிக் கடன் 7 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் விலையில்லா தேய்ப்பு பெட்டி 10 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் தையல் இயந்திரம் 1 நபருக்கும், சலவைப் பெட்டி 2 நபர்களுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடு பொருட்கள் மானியர் 7 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் குழிதட்டு நாற்றுகள் 2 நபர்களுக்கும் கூட்டுறவுதுறை மூலம் கால்நடை பராமரிப்பு கடன், சிறுவணிக கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் 14 நபர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் ஊட்டச்சத்து கிட் 6 நபர்களுக்கும் என 125 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.வெங்கடேசன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன், வாரணவாசி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.பிரேமா மோகனசுந்தரம், வாரணவாசி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.ஏகவள்ளி அன்னப்பன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments