Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

 காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் 29ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.



காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளில் உள்ளடக்கி தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி செயல்பட்டு வருகிறார். 

மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது கடந்த ஒரு வருட காலமாகவே திமுக உட்பட, மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் பணிகளை செய்யவில்லை எனவும், உரிய மக்கள் பணிக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மேயரை மாற்ற கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவர உத்தரவிடக்கோரி கடந்த மாத 07.06.2024

அன்று மாவட்ட ஆட்சியரின் சந்தித்து  30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மனு வழங்கினார்கள்.

இந்நிலையில் இதே கோரிக்கையை முன்னிறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். 

ஆனால் அந்த மனுவில் மேயரை நீக்க கூறும் காரணங்கள் முறையாக குறிப்பிடாமல் காரணங்கள் போதுமானதாகும் இல்லை என ஆணையர் தெரிவித்து உள்ளார்.

இதனால் , ஆணையர் தெரிவித்த மூன்று காரணங்களும் மேயர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்க்க வேண்டும் எனும் நோக்கிலேயே உள்ளதால், மாநகராட்சி ஆணையரை  மாற்றம் செய்து புதிய ஆணையரை கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டாவது முறையாக கோரிக்கை மனுவினை அளிக்க  05.07.2024 மீண்டும் 33 கவுன்சிலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து மனு அளித்திருந்த நிலையில்  மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு வரும் 29ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் இன்று மாமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments