Breaking News

மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டியில் ராமநாதபுரம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பெற்று சாதனை - ராஜா நாகேந்திர சேதுபதி பரிசுகள் வழங்கி பாராட்டினார்

ராமநாதபுரம், ஜுலை 9-

தமிழ்நாடு  விளையாட்டு மேமம்பாட்டு ஆனையம் இராமநாதபுரம் பிரிவு மாணவிகள் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றனர்.


எஸ்டிஏடி உள்விளையாட்டு அரங்கில் கீழக்கரை வி டீம் சார்பாக பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில்  70 அணிகள் பங்குகொண்டு விளையாடினார்கள்.

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் இராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகத்தின் புரவலர் ராஜா. நாகேந்திர சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மற்றும்  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பர்வீன், இராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகத்தின் இணை செயலாளர் வள்ளல் காளிதாஸ், ராஜா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ்பாபு, உடற்கல்வி ஆசிரியர் ஆர்தர் சாமுவேல் மற்றும் வி டீம்  பாத்திமா நவ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில்  எஸ்டிஏடி மாணவிகள் மதிமுகிழ் வள்ளல் ஒற்றையர் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகிய பிரிவுகளில் முதலிடமும், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் இரட்டையர்கள்  பிரிவுகளில் இரண்டாமிடமும்,  சினேஹா பெண்கள் இரட்டையர்  பிரிவுகளில் இரண்டாமிடமும், ராஷிகா கல்லூரி மாணவிகள் இரட்டையர்கள் பிரிவில் இரண்டாமிடமும்,  பிரியதர்ஷினி  13 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடமும்,  ஹர்ஷினி மற்றும் சாய்னா ஸ்ரீ 13 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர்  பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர்.

பரிசு பெற்று சாதனை புரிந்த வீராங்கனைகள் அனைவரையும் ராஜா மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பலரும் பாராட்டினர்.

No comments

Thank you for your comments