விசூர் ஊராட்சியில் பள்ளியிலிருந்து இடை நின்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா
காஞ்சிபுரம், ஜூலை 7:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விசூர் ஊராட்சியில் பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விசூர் ஊராட்சியில் பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையமும்,காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து பள்ளியிலிருந்து இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த்,குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல், முதுநிலை திட்ட மேலாளர் தூயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மை மேலாளர் கிருபாகரன் வரவேற்று பேசினார்.
விழாவில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் சகானா சங்கர் பள்ளியிலிருந்து இடை நின்ற குழந்தைகள் 52 பேருக்கு புத்தாடைகள் வழங்கி பேசினார்.
நிறைவாக பள்ளியின் பொறுப்பாளர் வள்ளி நன்றி கூறினார்.விழாவில் நிறுவனத்தின் ஒன்றிய மேலாளர்கள் பொண்ணுவேல்,ஜெகத்ரட்சகன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments