Breaking News

காஞ்சி சுவாமிகள் இன்று முதல் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்

காஞ்சிபுரம், ஜூலை 24:

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று வியாழக்கிழமை முதல் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்க இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் புதன்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக இருந்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவர் கடந்த வாரம் ராமேசுவரம்,திருவாணைக்காவல் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பி வழக்கம் போல சந்திரமௌலீசுவர் பூஜையை தொடர்ந்தார்.

காஞ்சிபுரம் திரும்பிய சுவாமிகளுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தற்போது காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் முகாமிட்டிருக்கும் அவர் இன்று வியாழக்கிழமை முதல் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கி வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வரை கடைப்பிடிக்கவுள்ளார்.

துறவிகள் தங்களது ஆன்மீக பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம் எனப்படுகிறது.இந்நாட்களில் துறவிகளை தரிசிப்பது சிறப்பாகும்.

பக்தர்கள் ஓரிக்கை மணி மண்டபத்தில் முகாமிட்டிருக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறலாம் எனவும் ந.சுந்தரேச ஐயர் கேட்டுக்கொண்டார்.பேட்டியின் போது ஓரிக்கை முகாம் மேலாளர் ஜானகிராமன்,ஸ்ரீ மடத்தின் நிர்வாகி கீர்த்திவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

 

No comments

Thank you for your comments