Breaking News

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள உதார் ரவுடி உதயா உள்ளிட்ட மூவர் கைது - குற்றவாளிகளுக்கு மாவுகட்டு

பொதுமக்களுக்கு தொடர் தொந்தரவு அளித்து வந்த குற்றவாளிகளுக்கு மாவுகட்டு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே அசைவ உணவகத்தில் பணிபுரியும் மேற்கு வங்க மாநில இளைஞர்க்கு சரமாரியாக கத்திக்குத்து

கத்திகுத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள உதார் ரவுடி உதயா உள்ளிட்ட மூவர் கைது

பதுங்கியிருந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்து தப்பி செல்ல முற்பட்ட போது கை,கால்களில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல்



காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் கிளாசிக் ரைடர் (CLASSIC RIDDER CAFE) எனப்படும் அசைவ  உணவகத்தை விக்னேஷ் என்பவர் நடத்தி வருகின்றார். இதில் பல்வேறு அசைவ உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மிக முக்கிய பகுதியான காமாட்சி அம்மன் கோவில் ,ஜெயின் கோவில் , காய்கறி மார்க்கெட், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பகுதியின் மையத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. 

இந்த நிலையில் உணவகம் தயாரிகாகும் செய்யும் இடத்தை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கால்மிதி , மாப்பு போன்றவற்றை வெளியே வைத்துவிட்டு ஓட்டலில் பணிபுரியும் வட மாநில இளைஞர் மைஃப்புஜா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே போதையில் வந்து கொண்டிருந்த பூக்கடை சத்திரம் பகுதி சேர்ந்த ரவுடி உதயா மற்றும் அவருடைய நண்பர்கள் அண்ணாமலை சதீஷ் ஆகியோர் இந்தக் கடை வழியே வரும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மாப்பு தள்ளிவிட்டு இருக்கிறார்கள். 

அவ்வாறு தள்ளிவிட்ட தரையை துடைக்க பயனிபடுத்தும் மாப்பு மைஃப்புஜால் மீது பட்டிருக்கிறது. அதனால் அந்த மேற்குவங்க இளைஞர் இவர்களிடம் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என கேள்வி கேட்டதால் போதையில் இருந்த உதயா உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அவை தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த உணவிலிருந்த காய்கறிகள் நறுக்க வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து மைஃப்புஜா வை முதுகு இடுப்பு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி உள்ளன இதில் படுகாயம் அடைந்த மைபோஜாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குடும்ப காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு கல்லூரி கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகளான உதயா, அண்ணாமலை சதீஷ் ஆகிய மூவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையெடுத்து போலீசார் அவர்களுக்கு வலை வீசி தேடி வந்த நிலையில் அவர்கள் ராயன்குட்டைபள்ளத்தெரு அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையெடுத்து போலீசார் அங்கு சென்ற நிலையில் தப்பியோடிய மூவரையும் பிடித்து கைது செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி உதயாவிற்கு கால் முறிவும்,அண்ணாமலைக்கு கை முறிவும் ஏற்பட்டு காஞ்சிபுரம் ஆர் எஸ் தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சதிஷ்-க்கு வீட்டில் தவறி விழுந்து கடந்த இரண்டு மாதங்களாக கை முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ரேஷன் கடை கட்டிடத்தின் மேல் பகுதியில் மூவரும் பதுங்கி இருந்த நிலையில் போலீசாரை கண்டதும் மூவரும் கட்டிடத்தில் மீதி இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற நிலையில் உதயாவிற்கு கால் முறிவும், அண்ணாமலைக்கு கை முறிவும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சதீஷ் இருக்கு கை முழு ஏற்பட்டு காயங்களுடன் இருந்து வரும் நிலையில் அவருக்கு இதில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர். 

மேலும் கால் முறிவு ஏற்பட்டுள்ள உதயா உறங்கிக் கொண்டிருந்த யாசகம் பெறும் முதியவரை கல்லை தலையில் போட்டு கொன்றது, பூக்கடை சத்திரம் பகுதியில் அரசு பேருந்தை பட்டா கத்தியால் உடைத்தது, பூக்கடை சத்திரம் பகுதியில் வாகன ஓட்டிகளை கையில் பிளேடை கொண்டு அச்சுறுத்தியது என நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் பொதுமக்களை தொடர் அச்சுறுத்தி வந்த தான் தான் ரவுடி என உதார் விட்டு வந்த ரௌடிக்கு மாவு கட்டானது போடும் நிலையானது ஏற்பட்டிருக்கிறது.

No comments

Thank you for your comments