ஆடி முதல் நாளே தங்கம் விலை கிடுகிடு உயர்வு! - பவுனுக்கு ரூ.720 அதிகரிப்பு
சென்னை:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 அதிகரித்த நிலையில், ஆடி முதல் நாளான புதன்கிழமை(ஜூலை 17) மீண்டும் பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.6,830-க்கும், ஒரு பவுன் ரூ.360 அதிகரித்து ரூ.54,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், ஆடி மாதம் முதல் நாளிலே அதிரடியாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 அதிகரித்து தங்க நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, புதன்கிழமை( ஜூலை 17) கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.6,920-க்கும், ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும், செவ்வாய்க்கிழமை 20 காசு குறைந்து ரூ.99.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.99,500-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,00,500-க்கும் விற்பனையாகிறது.
No comments
Thank you for your comments