Breaking News

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது - 120 மது பாட்டில்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட அரசு மதுபான பாட்டில்களுடன் கைது செய்யப்பட்ட கோபிநாத்

காஞ்சிபுரம், ஜூலை 25:

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற நபரை மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 120 அரசு மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவேப்பம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத்(47) இவரது சொந்த கிராமத்தின் அருகிலிருந்த குளக்கரை முட்புதரில் மறைத்து வைத்திருந்து அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக மதுவிலக்குப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது. 

அத்தகவலின் பேரில் அவரது தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கோபிநாத்தை கைது செய்தனர்.பின்னர் அவரிடமிருந்த 120 அரசு மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் சந்திர சேகரன் கூறுகையில், 

டாஸ்மாக் கடை ஊழியர்கள் இருவரது உதவியுடன் ஒரு மதுப்புட்டிக்கு ரூ.20 கூடுதலாக வைத்து எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் விற்பனை செய்துள்ளார். 

இதன் காரணமாக கோபிநாத்தை கைது செய்திருக்கிறோம்.120 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்திருப்பதுடன் இக்குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த டாஸ்மாக் கடை ஊழியர்களையும தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார்.



No comments

Thank you for your comments