மீனாட்சி மருத்துவகல்லூரியில் சர்வதேச செவிலியர் தினம் விழா
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியின் தலைவர் திருமதி மகாலட்சுமி அவர்கள். தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகையில் செவிலியரின் மனித நேய பணியின் அவசியத்தை வியந்து போற்றினார்.
பேருந்து நிலையத்தில் உயிருக்கு போராடிய பயணியின் உயிரை CPR சிகிச்சை மூலம் காப்பாற்றியதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் பேராசிரியர் பூபதி அவர்கள் செவிலியர்களின் தன்னலமற்ற பணியின் அவசியத்தை எடுத்துரைத்தார் செவிலியர்களுக்கு அளிக்கும் தொடர் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வலியுறுத்தினார்.
மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய 12 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர்கள் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். பல்வேறுபோட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.
மருத்துவ மனையின் தலைமை செவிலிய அலுவலர் லெப்டிணட் கலோனல் திருமதி. ஷர்மிளா அவர்கள் இவ்வருட செவிலியர் தினத்திற்கு "நமது செவிலியர் நமது வருங்காலம் - கவனிப்பின் பொருளாதார சக்தி" என்னும் கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரி துணைமுதல்வர்கள் பேராசிரியர் ஈஸ்வரி, பேராசிரியர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினர்
விழாவிற்கு மருத்துவ கல்லூரி பேராசிரிய பெருமக்கள் உதவி பேராசிரியர்கள் மருத்துவ,,செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர் .
முன்னதாக செவிலிய அலுவலர் திருமதி சசிகலா அவர்கள் வரவேற்புரை நல்கினார் விழாவின் நிறைவாக செவிலிய அலுவலர் உமா அவர்கள் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வரின் ஆலொசனையுடன் செவிலிய துறை செய்திருந்தது.
No comments
Thank you for your comments