Breaking News

தேசிய சிலம்பாட்டப்போட்டியில் வெற்றி - காஞ்சிபுரம் சிலம்பாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படவிளக்கம் : தேசிய சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட சிலம்பாட்ட வீரர்கள்


காஞ்சிபுரம்,மே. 7

கோவையில் அண்மையில் நடைபெற்ற தேசிய சிலம்பாட்டப் போட்டியில் வென்று பதக்கங்களை பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த சிலம்பாட்ட வீரர்களுக்கு செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் அண்ணையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது.இதில் 7 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் 29 பேர் பங்கேற்றிருந்தனர். 

இவர்கள் அனைவரும் பல்வேறு சுற்றுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றெடுத்து காஞ்சிபுரம் திரும்பினார்கள்.

இச்சிலம்பாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் பட்டாசுகள் வெடித்தும், அனைவருக்கும் மாலைகள் அணிவித்தும் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களும் அவரவர்களது குழுந்தைகளுக்கு மாலைகள் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.




No comments

Thank you for your comments