பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அதிரடி நடவடிக்கை - மக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்ததைக் கண்டு பூந்தமல்லி ஆணையர் லதா அவர்கள் உடனடியாக தூய்மை பணியாளர்களை அழைத்து இரவு நேரத்தில் பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இங்கு மக்கள் தினந்தோறும் ஆயிரம் கணக்கில் கூடும் பேருந்து நிலையம், எங்கு பார்த்தாலும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. நோய் பரவும் சூழலும் நிலவி வருவதாக தெரிகிறது.. உடனடியாக அனைத்து குப்பைகளையும் அகற்றி பிளீச்சிங் பவுடர். பினாயில் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.
தூய்மை பணி நடைபெறுவதைக் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிக மகிழ்ச்சியுடன் நகராட்சி ஆணையருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments