சிறுமுகையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு !
அதில் ஒரு பகுதியாக சிறுமுகை பேரூர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் தியேட்டர் மேடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ, பா.அருண்குமார் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், ஜூஸ், தர்பூசணி, திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் நவீன், சிறுமுகை பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments