Breaking News

காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம், மே 6:

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சார்பில் நீர்,மோர் பந்தலை உத்தரமேரூர் சட்டப் பேரவை உறுப்பினரும்,கட்சியின் மாவட்ட செயலாளருமான க.சுந்தர் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

படவிளக்கம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யும் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்.உடன் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்

கோடைவெயிலின் தாக்கம் தினசரி அதிகரித்து வரும் நிலையில் திமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜ் விழாவிற்கு தலைமை வகித்தார்.

காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக், மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உத்தரமேரூர் எம்எல்ஏவும், கட்சியின் மாவட்ட செயலாளருமான க.சுந்தர் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசம், மோர் மற்றும் குளிர்பானங்களை விநியோகித்தார்.

பகுதி செயலாளர் திலகர்,ஒன்றிய செயலாளர் குமார் உட்பட திமுக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments