Breaking News

காஞ்சிபுரத்தில் உலக ஆஸ்த்மா தினம்

காஞ்சிபுரம், மே.9:

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை உலக ஆஸ்த்மா தினத்தையொட்டி ஆஸ்த்மா நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


படவிளக்கம் : உலக ஆஸ்த்மா தினத்தையொட்டி ஆஸ்த்மா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை பொதுமக்களிடம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்


காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் உலக ஆஸ்த்மா தினம் நடைபெற்றது. மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மருத்துவர் ராதிகா ஆஸ்த்மாக நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அறிகுறிகள், தடுப்புமுறைகள், சிகிச்சை முறைகள் ஆகியனவற்றை வரைபடம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களுடன் விளக்கம் அளித்து பேசினார்.செவிலியர்கள் ஆஸ்த்மா நோய் விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் விழிப்புணர்வு சுவரொட்டிகளை காண்பித்தனர்.

இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments