பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையம் பகுதியில் முருகன் வள்ளி கும்மி அரங்கேற்றம்
கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையம் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் மொங்கம்பாளையம் ஆறுமுகா வள்ளி கும்மி குழுவினர் அரங்கேற்று விழா நடைபெற்றது.
இதில் ஆடலில் முதல் கலையான கும்மி கலை பயிற்சிகளை குமரன் வள்ளி கும்மி அரங்கேற்ற ஆசிரியர்கள் சசிகுமார், முருகேஷ் அளித்திருந்து நடைபெற்றது.
இவ்விழா ஊராட்சி மன்ற தலைவர் பூபதி (எ) குமரேசன் தலைமையில் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, வள்ளி கும்மி பயிற்சிக்கு பத்மபூஷன் விருது பெற்ற பத்திரப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளுடன் பல்வேறு முருகன் வள்ளி பாடல்களுக்கு கும்மி நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதில் ஊர் பிரமுகர்கள், வார்டு உறுப்பினர்கள் மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் உணவு உபசரிக்கப்பட்டு சிறப்பாக நிறைவுற்றது.
No comments
Thank you for your comments