காஞ்சிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் நிகழ்வு
காஞ்சிபுரம், மே 14:
காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளம் மேல்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் கூழ்வார்த்தல் நிகழ்வையொட்டி இம்மாதம் 10 ஆம் தேதி கணபதி ஹோமம்,அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் பூஜகர் கே.ஆர்.காமேசுவர குருக்கள் சிறப்பு தீபாராதனைகளை நடத்தினார்.
மறுநாள் 11 ஆம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டும் உற்சவம் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை சர்வதீர்த்தக்குளக்கரையிலிருந்து பக்தர் ஒருவர் கரககம் எடுத்து வந்தார். அவருடன் பக்தர்கள் பலரும் அக்னிச்சட்டி,பால்க்குடம் ஆகியன எடுத்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனையடுத்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும்,பொங்கல் வைத்தல்,கும்ப படையல் ஆகியனவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் நந்தகுமார்,பக்தவத்சலம் மற்றும் சங்கர மடத்தின் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments