Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் காஞ்சிபுரம் இளைஞர் கைது

காஞ்சிபுரம்,ஏப்.4:

காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை,கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.



காஞ்சிபுரம் நிமந்தக்கார ஒத்தவாடைத் தெருவில் வசித்து வரும் சலீம் மகன் காதர் என்ற ஷேக்காதர்(37)இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை,கொலை முயற்சி வழக்குகள் இருந்து வந்தன.சரித்திரப்பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வந்த நிலையில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இவரது பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் காதரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments