Breaking News

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் நேரில் ஆய்வு

 காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனை மற்றும்  மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு இராஜ வீதியில் இயங்கி வரும் நியாய விலைகடையினை இன்று (29.04.2024)  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புறநோயாளிகள் அனுமதி சீட்டு வழங்குமிடத்திற்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, இணை இயக்குநர் மற்றும் மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். 

மேலும் மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு விவரங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்து, வரும் நாட்களில்  கோடை  வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள  தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மருத்துவமனை சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை வழங்கிடுமாறு  கேட்டுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வினை தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு இராஜ வீதியில் இயங்கி வரும் நியாய விலைகடையில் பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்டு வரும் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், உப்பு மற்றும் பருப்பு வகைகளின் இருப்பு மற்றும் அதன் தரத்தினை  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பினை  மற்றும் நியாய விலை கடையில் வைக்கப்பட்டு பொருட்களின் இருப்பு விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சரிப்பார்த்தார்கள்.

 இந்நிகழ்வின் போது  இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்), மரு.கோபிநாத் மற்றும் அரசு மருத்துவர்கள் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments