Breaking News

களக்காட்டூரில் அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம், ஏப்.29:

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி காஞ்சிபுரம் அருகேயுள்ள களக்காட்டூர் கிராமத்தில் அதிமுக சார்பில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


படவிளக்கம் : களக்காட்டூரில் தண்ணீர்பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர்கள் வி.சோமசுந்தரம், பா.வளர்மதி மற்றும் கட்சியின் நிர்வாகிகள்


கோடைகாலத்தில் தினசரி வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியினர் தண்ணீர்ப்பந்தல் திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில் ஒன்றிய செயலாளர் ராஜூ ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் விழாவிற்கு தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தண்ணிர்ப்பந்தலை திறந்து வைத்தார்.

விழாவிற்கு கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான பெரும்பாக்கம். இ.ராஜசேகர், முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். பழச்சாறுகள், ரோஸ் மில்க்,தர்ப்பூசணிப் பழங்கள் ஆகியனவற்றை பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். 

முன்னதாக பாமகவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.



No comments

Thank you for your comments