Breaking News

காஞ்சிபுரத்தில் உலக சுகாதார தின விழா

காஞ்சிபுரம், ஏப்.7:

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா இந்திய மருத்துவக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.



இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை சார்பில் காஞ்சிபுரம் செங்கழு நீரோடை வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா கழகத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்திய மருத்துவக்கழக கிளை அமைப்பான மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மு.ராகுல்பாண்டியன், கி.தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்ததுடன் செயற்கை மார்பளவு மனித உடல்களை வைத்து அடிப்படை முதலுதவி செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கழக இணைச் செயலாளர் வெ.முத்துக்குமரன் வரவேற்று பேசினார். பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

நிகழ்வில் மூதாட்டி சம்பாலட்சுமி, நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த கியான்சந்த் மற்றும் துரைப்பாண்டியன், மனோகரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை காமாட்சி மருத்துவமனை செவிலியர்கள் மணிமேகலை மற்றும் உமா தேவி குழுவினர் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments