காஞ்சி காமாட்சி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.37 லட்சம்
காஞ்சிபுரம், ஏப்.25:
படவிளக்கம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளர்கள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதிக்குப் பிறகு ஆலயத்திலிருந்த இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ.37,12,347, தங்கம் : 222 கிராமும், வெள்ளி 241 கிராமும் இருந்தன.
கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன், கோயில் மணியக்காரர் சூரியநாரயணன் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள்,தன்னார்வலர்கள் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments