காஞ்சிபுரம் சங்கர மடத்தில் துவாரகா மடத்தின் சுவாமிகள் தரிசனம்
காஞ்சிபுரம், மார்ச் 4:
பெங்களூரில் உள்ள துவாரகா மடத்தின் மடாதிபதி ஸ்ரீ வித்ய நாராயண தீர்த்த சுவாமிகள் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு விஜயம் செய்தார். அவருக்கு ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் சால்வையும் மாலையும் அணிவித்தும் வரவேற்றார்.
பின்னர் மடத்தில் காஞ்சி மகா பெரியவர் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தார்.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.இதனையடுத்து சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
No comments
Thank you for your comments