09-03-2024-ம் தேதி அன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில். பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்கதிர்பூர், உத்திரமேரூர் வட்டத்தில் களியாம்பூண்டி, வாலாஜாபாத் வட்டத்தில் சின்னிவாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் கிளாய், குன்றத்தூர் வட்டத்தில் சென்னாகுப்பம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.
மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments