Breaking News

பாராளுமன்ற தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 –ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர். திருப்பெரும்புதூர். உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 127  மண்டல குழுக்களுக்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM Machine) பயன்படுத்துவது குறித்த பயிற்சியும்,  

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மண்டல குழுக்களின் பணி மற்றும் பொறுப்புகள்  குறித்தும்   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இப்பயிற்சியில் மண்டல குழுக்களுக்கு வாக்குச்சாவடிகள் தணிக்கை செய்வது  குறித்தும் பயிற்சி  அளிக்கப்பட்டது.                                                                                                       

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ), (சென்னை, கன்னியாகுமரி திட்டம் காஞ்சிபுரம்) திரு.இராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments