கமல் கட்சிக்கு டார்ச் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் தகவல்
புதுடெல்லி :
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கான சின்னத்தை டிச.17-ம் தேதி முதல் கேட்டுப் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய தினமே டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சிசார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நீதி மய்யம்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments