"இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்" - திமுகவின் திண்ணை பிரசாரம் தொடங்கியது: வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம்
பிப்ரவரி 26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை தொடங்க திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டிருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் திண்ணை பிரசாரத்தை திமுகவினர் தொடங்கினர். இதில் மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடுவீடாக சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் துண்டறிக்கைகளை வழங்கி, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து விளக்கினர். மேலும் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள், தமிழ்நாடு அரசின் 2024-25க்கான பட்ஜெட் சிறப்பம்சம் குறித்தும் விளக்கினர். மேலும் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளையும் எடுத்துரைத்தனர்.
இதேபோன்று காஞ்சிபுரத்திலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களின் ஆலோசனையின் படி இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் என்கின்ற துண்டு பிரசுரத்தினை வழங்கினார்கள்.
அதாவது, காஞ்சிபுரம் மாநகரம் இரண்டாவது பகுதிக்குட்பட்ட 20-வது வட்டத்தில் பூத் எண் 172ல் அடங்கியுள்ள ராஜாஜி மார்க்கெட் தும்பவனம் அருணாச்சலம் தெரு, ஒத்தவாடை தெரு, பாலாஜி தியேட்டர் எதிர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பகுதி கழக செயலாளர் எஸ்.சந்துரு அவர்களுடன் 20வது வட்ட கழக செயலாளர் தனசேகரன் மற்றும் கழகத்தினருடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் பகுதி கழக பிரதிநிதி ஆர்.செந்தில், பகுதி கழக பொருளாளர் ராமமூர்த்தி, வட்ட கழகத்தை சார்ந்த அன்சர் பாஷா, மாபுப் பாஷா,புருஷோத்தமன் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.
இவர்களுடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக. மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் இ.ஜாபர் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.
மக்களோடு மக்களாக திண்ணையில் அமர்ந்து திமுகவினர் மேற்கொண்ட இந்த திண்ணை பிரசாரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.
No comments
Thank you for your comments