Breaking News

அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழா விரைவில் நடத்தப்படும் - அமைச்சர் துரைமுருகன்

அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழா விரைவில் நடத்தப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம், நிதிநிலை அறிக்கை நிறைவேற்றத்துக்காக ஏழு நாள்கள் பேரவை கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது. 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்காக சட்டப் பேரவை இன்று கூடி நடைபெற்று வருகிறது.

சட்டப் பேரவையில் இன்றைய நிகழ்வில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழா விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன்

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க. செல்வம், துரை ராமசாமி உள்ளிட்டோருக்கும், முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந்த நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் எப்போது செய்ல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் கேள்விக்கு, இத்திட்டத்தின் துவக்க விழா விரைவில் நடத்தப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

No comments

Thank you for your comments