Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட திட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில், இன்று (14.02.2024) மாவட்ட திட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் மாவட்ட திட்டக்குழு தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இத்திட்டக்குழு கூட்டத்தில் திட்டக்குழு  உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெளிவுரை அளிக்கப்பட்டது. மேலும் கோரிக்கைகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயக்குமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

No comments

Thank you for your comments