Breaking News

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி எம்எல்ஏ க. சுந்தர் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி,  காஞ்சிபுரத்தில் கலைஞர் பவள விழா மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர்  தலைமையில்  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.


நாம் ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்தை காக்கும் கவசமாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்.  #மதவெறிக்கு_முற்றுப்புள்ளி வைப்போம்.  

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், மாநகர செயலாளர் திரு.சி.கே.வி.தமிழ்செல்வன், மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.எஸ்.கே.பி.சீனிவாசன், பகுதி செயலாளர்கள் திரு.எஸ்.திலகர், திரு.எஸ்.சந்துரு, திரு.அ.தசரதன், திரு.சு.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் திரு.க.குமணன், திரு.பி.எம்.குமார், திரு.பி.எம்.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அ.யுவராஜ்,மாநகர து.செயலாளர்கள் திரு.வ.ஜெகன்நாதன், திரு.ஏ.எஸ்.முத்துசெல்வன், காஞ்சி தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் A.நூருல் அமீன், துணை தலைவர் E.ஜாபர், சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட-மாநகர-பகுதி-ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மதநல்லிணக்க உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

No comments

Thank you for your comments