காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
காஞ்சிபுரம்:
திருப்பெரும்புதூர் கோட்டம் வல்லம் வடகால் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்லம் வடகால் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதனால், 25.11.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை உள்ள பகுதிகள் வல்லம் சிப்காட், வடகால் சிப்காட், சலையனூர், பால்நல்லூர், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை மற்றும் எச்சூர் ஆகியவை இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர் R.பாலமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments