Breaking News

காஞ்சிபுரம் : மாரத்தான் போட்டியில் குளறுபடி

காஞ்சிபுரம் : 


காஞ்சிபுரம் மாவட்டம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் மாரத்தான் போட்டி இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது.

இப்போட்டியை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.



இந்த மாரத்தான் போட்டியானது காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் துவங்கி பேருந்து நிலையம், மேட்டுதெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செவிலிமேடு வரை சென்று நிறைவு பெற்றது.

இந்த  நான்கு கேட்டகிரியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஐந்து கிலோமீட்டர் மற்றும் 8 கிலோமீட்டர் தூரம் ஓடிய வீரர் வீராங்கனைகளுக்கு மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவலா அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விரர், வீராங்கனைகள் பங்கு பெற்ற சான்றிதழ்களும் மற்றும் வெற்றி  பெற்ற சான்றிதழ்களை வாங்க  வீரர்களை அண்ணா காவலர் அரங்கத்தில் காத்திருந்தனர்.

ஆறு மணிக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெறும் என தெரிவித்திருந்த நிலையில் காலை 5:30 மணி அளவில் இருந்து வீரர் வீராங்கனைகளை போட்டி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் குறைந்த அளவிலே போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

No comments

Thank you for your comments