அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று (07.10.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையாண அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை நடத்தினால் சிறப்பாக அமையும் எனவும், பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஆண்டு தோறும் நடத்தப்படும் எனவும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
அதன்படி அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.
போட்டியின் விவரம்
வ.எண். | வயது வரம்பு | ஆண்கள் | பெண்கள் |
01 | 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் | 8 கி.மீ | 5 கி.மீ |
02 | 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் | 10 கி.மீ | 5 கி.மீ |
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக முதல் பரிசு தொகை தலா ரூ.5000/- இரண்டாம் பரிசு தொகை ரூ. 3000/- மூன்றாம் பரிசு தொகை ரூ.2000/- ம் வீதமும், 4 ஆம் பரிசு முதல் 10 ஆம் பரிசு வரை தலா ரூ.1000/- ம் வீதமும், பரிசுத் தொகையுடன் தகுதிச்சான்றும் வழங்கப்பட்டது.
இவ்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர்.திரு.க.கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சு.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் களந்துகொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments