Breaking News

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

காஞ்சிபுரம் : 

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது செம்பரம்பாக்கம் ஏரி.  இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக ஏரிக்கு தொடர் நீர் வரத்தானது இருந்து வருகிறது அதன்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 231கன அடிநீரானது வந்து கொண்டிருக்கிறது. 



இந்த நிலையிலே ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போதைய நீர் இருப்பு 21.96 ஆக இருந்து வருகிறது அதே போல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3645 மில்லியன் கனஅடியில் 3110 மில்லியன் கனஅடி நீரானது நிரம்பியுள்ளது. 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தினை 22 அடியாக நிலை கொண்டு கண்காணித்து வரக்கூடிய நிலையில் தற்போது 22 அடியை ஏறியானது நிரம்பியுள்ளது. 


இதன் காரணமாக ஏரியிலிருந்து 100 கன அடி உபரிநீரானது  இன்று  (08-10-2023) காலை 10.00 மணிக்கு திறந்துவிடப்பட இருக்கிறது.

இதன் காரணமாக ஏரியிலிருந்து மிகைநீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றங்கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தியுள்ளார்.



No comments

Thank you for your comments