சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் நில எடுப்பு... சரியான இழப்பீடு வழங்க கோரி வழக்கு
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் நில எடுப்பு திட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி மற்றும் ஆயக்கொளத்தூர் ஆகிய கிராமங்களில் ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலத்திற்கு 39 கோடி ரூபாய் முறைகேடாக இழப்பீடு வழங்கிய வழக்கில் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு சரியான இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வழக்கு கொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது. நெமிலி கிராமத்தில் 19 கோடியும், ஆயக்கொளத்தூர் கிராமத்தில் 20 கோடியும் இழப்பீடு வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதில் 18 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள ரூபாய் இன்னும் வசூலிக்கப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் டிஆர்ஓ நர்மதாவுக்கு சமீபத்தில் ஒரு மாத சிறை வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 8மாத காலமாக தலைமறைவாக இருந்த வந்த நர்மதாவை காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் மதுரையில் வைத்து கைது செய்ததாக தெரிகிறது.இதனையெடுத்து அவரிடம் விசாரணை நடத்தி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments