அதிமுக ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் அதிமுக ஒபிஎஸ் அணி மற்றும் அம முக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அண்ணா திமுக ஒபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர். வி ரஞ்சித் குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். அவைத் தலைவர் ரங்கநாதன், அமுமுக மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் சோமங்கலம் ரமேஷ் ,மாவட்ட பொருளாளர் வஜ்ஜிர வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் முனிரத்தினம் ஒன்றிய செயலாளர் மாகரல் சசி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் குணசேகரன், அமுமுக ஒன்றிய செயலாளர்கள் நாராயணசாமி, வேலியூர் தனசேகரன் உட்பட இரு கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை மர்ம நிகழ்வுகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments
Thank you for your comments