Breaking News

அண்ணா காவல் அரங்க மைதானத்தில் எல்.இ.டி திரையில் ஹாக்கி போட்டி நேரடி ஒளிபரப்பு


தமிழ்நாடு அரசு மற்றும் ஹாக்கி இந்தியா  இணைந்து நடத்தும் 7-வது ஆசிய  சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி சென்னையில் தொடங்கிய  நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (03.08.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில், எல்.இ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஹாக்கி இந்தியா  இணைந்து நடத்தும் 7-வது ஆசிய  சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் 10 நாட்கள் (ஆகஸ்டு 3 முதல் 12 வரை) நடைபெறுகிறது. 

இப்போட்டி பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா முன்னாள் சாம்பியன்கள் இந்தியா மற்றும் சீனா ஜப்பான் மலேசியா ஆகிய  ஆறு  அணிகள்  பங்கேற்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், 31.07.2023 அன்று செயின்ட் தாமஸ் மவுண்ட்டில், 7-வது ஆசிய  சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிக்கான கோப்பையை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள்  அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து இன்று (03.08.2023 முதல் 12.08.2023 வரை) நடத்தும் 7-வது ஆசிய  சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் துவங்கி நிலையில், இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில், எல்.இ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. சங்கீதா, இ.ஆ.ப., அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments