விவசாயிகளுக்கு ரூ.9,95,344/- மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (03.08.2023) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு துறை சார்பில், 16 விவசாய பயனாளிகளுக்கு ரூ.9,94,744/- மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 2 விவசாய பயனாளிகளுக்கு பழச்செடிகளின் தொகுப்புகளும், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.600/- மதிப்பிலான தென்னங்கன்றுகளும் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்ட வளாகத்தில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல்முறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முனைவர்.லோ.சுரேஷ், மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments