Breaking News

400-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் கறுப்பு கொடி - மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


காஞ்சிபுரம் 





காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம்,நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி,ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 400-வது  நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஊர் மைதானத்தில் ஒன்றுகூடி கண்ணில் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு,கைகளில் கறுப்பு கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தியவாறு 

கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்,ஒரு பிடி மண்ணைக் கூட விமான நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம்,

வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம், வளர்ச்சி என்ற பெயரை சொல்லி ஏகனாபுரத்தின் மக்களை முட்டாள் ஆக்க பார்க்காதே,

ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் திருவோடு எங்கள் கையில்  என கோஷமிட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்  என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி  கண்டன கோஷங்களை எழுப்பி தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

400-வது நாளாக நடந்த தொடர் போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு வேதனையுடன் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments