வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் திருத்தேர் திருவிழாவையொட்டி அன்னதானம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாசம் பிரமோற்சவம் திருத்தேர் திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் தூண் அருகே மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
உடன் கழக அமைப்பு செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி , பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி, கோல்டு ரவி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம் களக்காட்டூர் ராஜி, மாமன்ற உறுப்பினர் சித்தன், கோல்டு மோகன் உள்ளிட்டோர் உள்ளனர்




No comments
Thank you for your comments