Breaking News

அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆர் வி ரஞ்சித் குமார்

காஞ்சிபுரம்  : 

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர் வி ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா திருவுருவ சிலைக்கு இன்று காலை தொண்டர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.


காஞ்சி தொழிலதிபரும் ஆன்மிக பிரமுகமான அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர் வி ரஞ்சித் குமார் ஏற்பாட்டில் 15 வாகனங்களில் 200க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் என ஓபிஎஸ் விசுவாசி தொண்டர்களுடன் இன்று காலை 8 மணிக்கு அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா புரட்சி மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு மூன்று மணிக்கு சென்றடைகின்றனர்.

முப்பெரும் விழாவில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு காஞ்சிபுரம் சீர்வரிசையாக எடையுள்ள ஐம்பொன்னிலான காமாட்சி விளக்கினை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் அவருக்கு வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து  ஆளுயுர மாலை மலர் கிரீடம் அணிவிக்கப்படுகிறது. என செய்தியாளர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் ஆர் வி ரஞ்சித்குமார் தெரிவித்தார்.

உடன் கழக நிர்வாகிகள்  ரங்கநாதன் மாவட்ட அவை தலைவர், E கோமளா மா.மகளிர் அணி, செயலாளர், இரா ரமேஷ் மா.க.து. செயலாளர், பெருநகர் சகுந்தலா  கோபால்மா.க.து. செயலாளர்,  வஜ்ரவேலு மாவட்ட கழக பொருளாளர், P குணசேகரன்மா.அ.பே. செயலாளர், டி ஏ சுதர்சனன்மா.வழ.பி. செயலாளர், A வேலு.கா.மாநகர. செயலாளர்,மா.சிறுபான்மை  செ மாகரல் சசி.கா.கி.ஒ. செயலாளர், N அருள்.கா.மே.ஒ. செயலாளர் , மகாலட்சுமி..  A. பழனி . பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

No comments

Thank you for your comments