குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி முகாமை துவக்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் .மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மாணவ / மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்கள்.
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (14.02.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பென்டசோல் என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதாரதுறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக் கல்விதுறை பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 21.02.2023 அன்று அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 1 முதல் 2 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு அல்பென்டசோல் தலா ½ (200 mg) மாத்திரை மற்றும் 2 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும் 20 முதல் 30வயதுவரைஉள்ளபெண்களுக்கும் தலா 1 (400 mg) மாத்திரை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டு மொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்கி அனைவரும் மேற்கண்ட நாளில் குடற்புழு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பிரியாராஜ், சுகாதாரப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments