காலச்சக்கரத்தின் எதிரொலி - ஆவடி மாநகராட்சியில் முறைகேடுகள் செய்த அதிகாரிகள் அதிரடி மாற்றம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காலச்சக்கரம் நாளிதழில் பொதுமக்களின் குரல்களாக ஜனவரி 26 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியில், நகரமைப்பு பிரிவில் நகரமைப்பு அலுவலர் வேலாயுதம் என்பவர் அனுமதி வழங்குவதிலும் சப் டிவிஷன் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், அனுமதி வழங்காத கட்டடங்களுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி “ப” வைட்டமின் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை வெளியிட்டிருந்த செய்தியின் எதிரொலியாக, 11.02.2023 அன்று அரசு சார்பு செயலாளர் அவர்களின் அதிரடி உத்தரவுப்படி வேலாயுதம் என்பவர் உதவி நகர திட்டமிடுனர் உதவி செயற்பொறியாளர் நிலை நாகர்கோவில் மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்
இதேபோல் ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றிய நிர்மலா தேவி அவர்களும் திட்டக்குடி நகராட்சிக்கு நகரமைப்பு ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல் திருவேற்காடு நகராட்சியில் பணிபுரியும் நாகராஜ் நகரமைப்பு அலுவலர் இவர் செய்த முறைகேடுகளால் குளச்சல் நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து முறைகேடு செய்யும் அதிகாரிகளை உடனடியாக மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்களின் குறைகளை வெளியிடும் எந்தவித சமரசமின்றி செய்திகளை வெளியிடும் காலச்சக்கரம் நாளிதழ் “உரக்கச்சொல் உங்கள் பகுதி”க்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இனியாவது தற்போதுள்ள அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் பணி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments