Breaking News

தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகர் காஞ்சிபுரத்தில் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரெட்டி பேட்டை தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன்.  பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர், காஞ்சிபுரம் மாநகர பாஜகவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.



இந்நிலையில் பாஜக பிரமுகரான ஜெகதீசன் யூட்யூபில் தமிழ்நாடு முதலமைச்சரையும், அவரின் குடும்பத்தினரையும் தரக்குறைவாக சித்தரித்து பேசி உள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் திமுக வழக்கறிஞர் அணி பிரிவு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் பாஜக பிரமுகரான முன்னாள் நகர தலைவர் ஜெகதீசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு கைது செய்து உள்ளனர்.


பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜக கட்சியினர் இடையேயும், காஞ்சிபுரம் பொதுமக்கள் இடையேயும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments