Breaking News

தொரவலூர் கிராமத்தில் 50-ஆண்டுகளாக குடியிருந்த 40 வீடுகளை பொதுப்பணி துறையினர் அகற்றம்.. கருப்புக் கொடி கட்டி ஆர்பாட்டம்

தொரவலூர் கிராமத்தில் நீர் நீர்நிலை ஆக்கிரமித்து 50-ஆண்டுகள் வாழ்ந்த 40 வீடுகளை பொதுப்பணி துறையினர் அகற்றம். வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவலூர் கிராமத்தில் பொதுப்பணிக்க சொந்தமான ஏரி சுமார் 125-ஏக்கர் பரப்புள்ள கொண்ட பெரிய ஏரி உள்ளது 

அந்த ஏரியின் கரையின் ஓரமாக தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி 50ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின் படி நீர்நிலை ஆக்கிரம்புகளை அகற்றி வரும் அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தொரவலூர் ஏரி கரையின் ஓரமாக சுமார் 40 வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே வசித்து வந்தனர்.

இந்நிலையில் விருத்தாசலம் பொதுப்பணித்துறையினர் இன்று போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு போவதாக அறிந்த பகுதி பொதுமக்கள் தங்கள் வசித்து வரும் வீடுகளில் கருப்பு கொடியேற்றி தங்களுடைய எதிர்ப்புகளை, கண்டனத்தையும் தெரிவித்து  வருகின்றனர் 

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி வாழ்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments