Breaking News

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆய்வு

 காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள தாமல்வார் தெருவில் தொடர்ந்து கன மழையினால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் BE ,BL.,MLA  அவர்கள் ஆய்வு செய்து மழைநீரை உடனடியாக அப்புறப் படுத்த மீண்டும் அங்கு தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தார். 



உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி அவர்கள் பகுதி செயலாளர் திரு கே திலகர் சு வெங்கடேசன் கவுன்சிலர் திருமதி நிர்மலா எஸ் வி பிரகாஷ் பி சுரேஷ் மாநகராட்சி ஆணையர் திரு கண்ணன் மாநகராட்சி பொறியாளர் திரு கணேசன் நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர் திரு பெரியண்ணன் உதவி பொறியாளர் திரு விஜய் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் திரு உலகநாதன் திரு சரவணன் திரு பன்னீர்செல்வம் வருவாய் அலுவலர்கள் தேவராஜ் தாஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments