காஞ்சிபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 520 வழக்குகளுக்கு தீர்ப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பில் (லோக் அதாலத்) நடை பெற்றது. மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் தலைமை தாங்கினார்.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் ஹரிகரன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி கார்த்திகேயன் செயலாளர் கார்த்திகேயன் அட்வகேட் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரை முருகன் அரசு வழக்கறிஞர்கள் பி. கார்த்திகேயன் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments