சேலத்தில் திமுக-பாமக இடையே தள்ளுமுள்ளு
சேலம், ஆக.1-
சேலத்தில் பேனர் வைப்பதில் திமுக மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு கட்சிகளும் கடும் வாங்குவதில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாமங்கம் பகுதி ரத்தினசாமி சாலையில் மாநகராட்சி சார்பில் 32 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் கே என் நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பேனர் வைக்கும் பணி நடைபெற்றது.
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகசெஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா - முழு தொகுப்பு
அப்போது அங்கு வந்த திமுகவினர் இந்த பகுதியில் பேனர் வைக்க கூடாது என்றும் இது திமுக மாமன்ற உறுப்பினர் சார்பில் அமைக்கப்பட்ட தெருவிளக்கு எனவும் கூறி தெரு விளக்குகள் அமைக்கப்பட்ட கம்பத்தின் அருகாமையிலேயே திமுகவின் கொடியை அமைத்தனர்.
இந்த சம்பவத்தால் திமுக மற்றும் பாமகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை கண்ட அந்த பகுதியாக வந்த சேலம் மாநகர காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
அப்பொழுது அங்கு வந்த பாமக சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் தமிழக முதல்வர் படம் பொறிக்கப்பட்ட பேனரை திமுகவினர் கிழிப்பதா என ஆவேசப்பட்டார். இதனால் அங்கிருந்த திமுகவிற்கும் பாமகவினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
காவல்துறையினர் தடுத்த நிலையிலும் அவர்களை தாண்டி வந்து பாமக எம்எல்ஏ வை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து திமுகவினர் கட்டிய கொடி கம்பத்தையும் அகற்றினர். பாமகவினர் வைத்த பிளக்ஸ் போர்டையும் அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அரசு செலவில் செய்யப்பட்ட மக்கள் நல திட்டத்திற்கு யார் பெயர் வாங்குவது என இரு கட்சியினரும் மோதிக்கொண்ட சம்பவம் பார்வையாளர்களை முகம் சுழிக்க செய்தது

No comments
Thank you for your comments