ஊட்டி ஓவேலி பேரூராட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவர செல்ஃபி மையம்
கோவை, ஜூலை 27-
ஓவேலி பேரூராட்சி சாா்பில் சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தில் குடிநீா் ஆதராங்களும், காந்தி நகா் பகுதியில் குப்பை கொட்டும் இடம் சுத்தம் செய்யப்பட்டு செல்பி எடுக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு செயல் அலுவலா் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன் மற்றும் உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனா்.

No comments
Thank you for your comments