11-07-2022 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி முகாம்...NAC (National Apprenticeship Certificate) சான்றிதழ் வழங்கப்படும்...
காஞ்சிபுரம்:
11.07.2022 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஒரகடத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (IPM National Apprenticeship Mela (PMNAM) மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் (Industry Clusters) கொண்டு நடத்தப்படுகின்றது.
இம்முகாமில் தகுதியுடை ITI தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் NAC (National Apprenticeship Certificate) சான்றிதழ் பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண். 044 - 2989 4560.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments